பெரம்பலூர் ஸ்ரீவெள்ளந்தாங்கி அம்மன் ஏரிக்கரையில் முனீஸ்வரர் கோவில் அருகே அமைந்துள்ள 2-வது மதகு பகுதி ஷட்டர்கள் இன்றி உள்ளது. இதனால் ஏரியில் உள்ள தண்ணீர் எந்த நேரமும் வெளியேறி வீணாகி வருகிறது. இதனால் மழைபெய்யும்போது, இந்த ஏரியில் மழைநீரை சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் இப்பகுதியில் வெயில் காலங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் ஷட்டர் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.