வீணாகும் குடிநீர்

Update: 2022-07-29 11:02 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதி எடக்குடி வபபாதி கிராமம் அஞ்சல் அலுவலகம் அருகே உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் வெளியேறி வீணாக சாலையோரத்தில் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதிலிருந்து அந்த பகுதி முழுவதும் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அந்த வழியாக நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், குழாயில் ஏற்பட்ட உடைப்பினால் அந்த பகுதி மக்கள் குடிநீர் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் வீணாகாமல் இருக்க குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்