சேதமடைந்த குடிநீர் தொட்டி

Update: 2023-09-17 17:51 GMT
திருக்கோவிலூர் அருகே அரும்பாக்கம் ஊராட்சியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. இதில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து வருவதால், குடிநீர் தொட்டி அதன் உறுதித்தன்மையை இழந்து வருகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த குடிநீர் தொட்டியை இடித்துவிட்டு, புதிதாக கட்டித்தர வேண்டும்.

மேலும் செய்திகள்