வீணாகும் குடிநீர்

Update: 2023-09-06 09:49 GMT

ராயக்கோட்டை அடுத்த தர்மபுரி ரோட்டில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலையில் தேங்குகிறது. இதனால் வாகனம் ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் விபத்துகளும் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயை சரி செய்து பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்