சேதமடைந்த குடிநீர் தொட்டி

Update: 2023-09-03 18:15 GMT
தியாகதுருகம் அருகே புது உச்சிமேடு ஊராட்சிக்கு உட்பட்ட ராமநாதபுரத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு, அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தொட்டி பலத்த சேதமடைந்து, ஆங்காங்கே சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. இதனால் குடிநீர் தொட்டி எந்நேரத்திலும் இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த குடிநீர் தொட்டியை இடித்துவிட்டு, புதிய தொட்டி கட்டித்தர வேண்டும்.

மேலும் செய்திகள்