ஆபத்தான நீர்த்தேக்க தொட்டி

Update: 2023-09-03 11:53 GMT

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் திருக்குளக்கரை அங்கன்வாடி மையம் அருகில் ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது பயன்பாடு இல்லாமல் வலுவிழந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆபத்தான நிலையில் உள்ள இந்த நீர்த்தேக்க தொட்டியை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்