புகார்பெட்டி எதிரொலி; சுத்தமான குடிநீர் வழங்கப்பட்டது

Update: 2023-08-20 13:40 GMT

மயிலாடுதுறை 30-வது வார்டு தூங்கனாங்குளம் தென்கரை,வடகரை, கீழ்கரை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நகராட்சி சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீர் கலங்கலாக வந்தது. இதுகுறித்து ‘தினத்தந்தி’ புகார்பெட்டியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும், அதிகாரிகளுக்கும் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்