பழுதடைந்த மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி

Update: 2023-08-20 12:02 GMT

தஞ்சை மாவட்டம் ஆம்பலாபட்டு தெற்கு ஊராட்சியில் கீழகரம்பயம் உள்ளது. இங்கு பொதுமக்கள் வசதிக்காக குடிநீர் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டது. இந்த தொட்டி முறையான பராமரிப்பின்றி பழுதடைந்து காணப்படுகிறது. தொட்டியை தாங்கி பிடித்துள்ள தூண்களில் விரிசல்கள் ஏற்பட்டு இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விடும் நிலை உள்ளது. எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் மேற்கண்ட பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தேக்கத்தொட்டியை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்