தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யப்படுமா?

Update: 2023-08-16 13:46 GMT
திருச்செந்தூர் அருகே பள்ளிப்பத்து பஞ்சாயத்து சந்தையம்மன் கோவில் அருகில் தண்ணீர் தொட்டி உள்ளது. இதனை பொதுமக்கள் குளிப்பதற்கும், கால்நடைகளுக்கு தண்ணீர் வழங்கவும் பெரிதும் பயன்படுத்தினர். இந்த தொட்டி பல மாதங்களாக சுத்தம் செய்யப்படாததால் பாசி படர்ந்து மாசடைந்து காணப்படுகிறது. மேலும் தொட்டியை சூழ்ந்து சீமை கருவேல மரங்களும் வளர்ந்துள்ளன. எனவே தொட்டியை சுத்தம் செய்து, சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்