இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

Update: 2023-08-09 14:00 GMT

தஞ்சை மாவட்டம் கூத்தூர் ஊராட்சியில் அம்பேத்கர்புரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் தொட்டியை தாங்கி பிடித்துள்ள தூண்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. மேலும், தொட்டியில் ஆங்காங்கே விரிசல்களும் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக எப்போது வேண்டுமானாலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் நிலை உள்ளது. எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் தொட்டியை அகற்றிவிட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்