குடிநீர் தேவை

Update: 2023-08-06 13:18 GMT

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றியம் மணலூர் மேலத்தெருவில் கடந்த ஒரு மாதமாக பொதுமக்களுக்கு முறையான குடிநீர் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் வசிப்பவர்கள் குடிநீர் இன்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர். பெண்கள், முதியவர்கள் நீண்ட தூரம் சென்று குடிநீர் பிடித்து வரக்கூடிய நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையான ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்