செங்கல்பட்டு, தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் அம்பேத்கர் தெருவில் குடிநீர் தொட்டி ஒன்று உள்ளது. இந்த தொட்டி சில மதங்களுக்கு முன் உடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக மிகவும் சிரமம் படுகின்றனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய குடிநீர் தொட்டி அமைத்து கொடுக்கும் படி அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.