அரசு பஸ்சில் ஒழுகும் மழைநீர்

Update: 2023-07-26 10:30 GMT

ஊட்டியில் இருந்து தாய்சோலைக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்சின் மேற்கூரை பழுதடைந்து உள்ளது. மழை பெய்யும்போது, மேற்கூரை வழியாக அந்த பஸ்சுக்குள் மழைநீர் ஒழுகுகிறது. இதனால் அந்த பஸ்சில் பயணிக்கும் பொதுமக்கள் குடைகளை பிடித்தபடியும், மழைநீரில் நனைந்தபடியும் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக அவர்கள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே அந்த பஸ்சை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்