படித்துறை வேண்டும்

Update: 2022-07-24 14:23 GMT
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் தெற்குகாடு மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் சாலையில் சேத்துக்குளம் உள்ளது. இந்த குளத்தின் கரைகளில் படித்துறைகள் அமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், குளத்தின் கரைகளும் வலுவிழந்து காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேத்துக்குளத்தில் படித்துறைகள் அமைக்கவும், கரைகளை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்