தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2023-07-16 17:28 GMT
விழுப்புரம் மாவட்டம் கூட்டேரிப்பட்டில் உள்ள மயிலம் ரோட்டில் பஸ்நிறுத்தம் அமைந்துள்ளது. இதன் அருகே சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்பதால், பஸ் நிறுத்தத்திற்கு வரும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் தேங்கி நிற்கும் மழைநீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி, அப்பகுதி பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதை சரிசெய்ய அதிகாாிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்