குடிநீர் இன்றி மக்கள் அவதி

Update: 2022-07-24 12:29 GMT

பெரம்பலூர் மாவட்டம், சின்னசேலம் மெயின் ரோட்டில் உள்ள கைகளத்தூரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மக்களின் குடிநீர் தேவைக்காக இப்பகுதியில் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டி தற்போது பயன்பாடு இன்றி உள்ளதால், தற்போது 2 நாட்களுக்கு ஒருமுறை, 4 நாட்களுக்கு ஒரு முறை என பக்கத்து ஊரில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த தண்ணீர் இப்பகுதி மக்களுக்கு போதுமானதாக இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்