ஆற்றுக்குள் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2023-07-16 11:13 GMT

நாகை மாவட்டம் வடகரை ஊராட்சி வடக்கு புத்தாறில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. ஒருசிலர் இறைச்சி கழிவுகளையும், பிளாஸ்டிக் கழிவுகளையும் கொட்டிச்செல்கின்றனர். இதனால் நீர் மாசுபாடு ஏற்படுகிறது. மேலும், கொட்டப்படும் கழிவுகள் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடக்கு புத்தாற்றில் குப்பைகள், கழிவுகள் கொட்டி செல்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


மேலும் செய்திகள்