குடிநீர் குழாயில் கலந்த கழிவுநீர்

Update: 2023-07-12 15:22 GMT

அந்தியூர் தவுட்டுப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு பின்புறம் உள்ள சாக்கடை கால்வாயையொட்டி மின்கம்பம் அமைப்பதற்காக குழி தோண்டப்பட்டது. இதனால் அருகே உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கழிவுநீர் குடிநீர் குழாய்க்குள் புகுந்து தண்ணீர் கலங்கலாக வருகிறது. இதனை குடிக்கும் பொதுமக்களுக்கு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. உடனே குழாய் உடைப்பை சரிசெய்து கழிவுநீர் குடிநீர் குழாய்க்குள் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்