குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

Update: 2023-07-09 16:53 GMT
மேகமலை அருவியில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் மேகமலை, குமணன்தொழு உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள குழாய்களில் சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் தொடர்ந்து வீணாகி வருகிறது. அதனால் கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. குழாய்களை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்