பழுதடைந்த நீர்த்தேக்க தொட்டி

Update: 2023-07-02 10:25 GMT

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த குடவாசல் செல்லும் சாலையில் ஆண்டான்கோவில் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. முறையான பராமரிப்பில்லாததால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியால் அசம்பாவிதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் பழுதடைந்த நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

மேலும் செய்திகள்