மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சீரமைக்கப்படுமா?

Update: 2023-07-02 10:21 GMT

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா நாகங்குடி மேலத்தெருவில் பொதுமக்கள் வசதிக்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. இந்த நிலையில் முறையான பராமரிப்பின்றி தற்போது மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் எந்த நேரத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் நிலை உருவாகி உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்