வாய்க்கால் தூர்வாரப்படுமா?

Update: 2023-06-25 12:17 GMT

தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில் ஆனந்தவல்லி வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் மூலம் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. தற்போது வாய்க்கால் துர்வாரப்படாமல் செடி,கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. மேலும், வாய்க்காலில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள், விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.



மேலும் செய்திகள்