குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் அவதி

Update: 2023-06-25 12:13 GMT

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியம் கூத்தாநல்லூர் தாலுகா பாலாக்குறிச்சி பகுதியில் ராஜாங்கட்டளை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில 2 மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக பள்ளி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட கிராம மக்களுக்கு முறையான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்