வீணாகும் பாசன நீர்

Update: 2023-06-18 13:50 GMT

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டம் கண்டியூர் வழியாக குடமுருட்டி ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் மூலம் அரசூர்,செங்கமேடு,ரெட்டைகோவில் மற்றும் கண்டியூர் ஆகிய கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலையில் கண்டியூர் அருகே உள்ள ரெட்டைகோவில்தலைப்பு பகுதி வாய்க்கால் சட்டர் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பாசனத்துக்காக வரும் நீர் வீணாக வெளியேறி பயிர்கள் நீரில் மூழ்கிவிடுகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சட்டரை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


மேலும் செய்திகள்