ஆற்றுக்குள் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்

Update: 2023-06-18 11:52 GMT

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் குடமுருட்டி ஆறு செல்கிறது. இந்த ஆற்றுக்குள் இறைச்சி கழிவுகள், மீன் கழிவுகளை சிலர் கொட்டி வருகின்றனர். இதனால் ஆற்று நீர் மாசடைகிறது. மேலும், இறைச்சி கழிவுகளால் ஆற்றுப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக பொதுமக்கள் ஆற்றுநீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆற்றுக்குள் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்