மின்மோட்டார் பழுதால் குடிநீர் தட்டுபாடு

Update: 2023-06-14 17:02 GMT
மூங்கில்துறைப்பட்டில் உள்ள காமராஜர் நகரில் மினி குடிநீர்தொட்டி அமைந்துள்ளது. இதற்கு குடிநீர் ஏற்ற பயன்படுத்தப்படும் மின்மோட்டார் பழுதடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மின்மோட்டாரை சீரமைத்து குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்