குடிநீர் இன்றி மக்கள் அவதி

Update: 2023-06-04 11:42 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியம், பிலாவிடுதி ஊராட்சியை சேர்ந்த பட்டமா விடுதி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. ஆனால் ஆழ்துளை கிணற்றின் நீர்மட்டம் குறைந்ததாலும், குழாய்களில் பழுது ஏற்பட்டுள்ளதாலும் இப்பகுதியில் குடிநீர் சரியாக வினியோகம் செய்யப்படுவது இல்லை. இதனால் தண்ணீர் இன்றி இப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். எனவே ஆழ்குழாய் கிணற்றை சீரமைக்கவும், புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்