சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் வேண்டும்

Update: 2023-05-21 13:37 GMT

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பயணிகள் அது குடிநீர் தொட்டி என்று தெரியாமல் அவற்றில் கை, கால், முகம் கழுவுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தொட்டி முறையாக சுத்தம் செய்யப்படுகிறதா? என தெரியாமல் அந்த தண்ணீரை பொதுமக்கள் குடிக்க தயக்கம் காட்டுகின்றனர். எனவே புதிய பஸ் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்