பொது குடிநீர் தொட்டி

Update: 2023-05-14 17:45 GMT

சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட 23-வது வார்டில் உள்ள உட்பிரிவு பகுதியான ஆறுபடை நகர், திருவள்ளுவர் நகர், சண்முகா நகர், மகாத்மாகாந்தி வீதி, தங்க சாலை வீதி ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு சுமார் 1,500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இங்கு பொது குடிநீர் தொட்டி இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதியடைகின்றனர். எனவே இங்கு பொது குடிநீர் தொட்டி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்