குடிநீர் இன்றி மக்கள் அவதி

Update: 2022-07-22 12:54 GMT

பெரம்பலூர் மாவட்டம், கைகளத்தூரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக இப்பகுதியில் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நீர்த்தேக்க தொட்டி சிதிலமடைந்து பயன்பாடு இன்றி உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்