செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் கல்யாண சுந்தரம் தெருவில் உள்ள வீடுகளில் இருக்கும் குடிநீர் குழாய்களில் கடந்த 15 நாட்களாக கழிவு நீர் கலந்து வருகிறது. குடிநீரில் துர்நாற்றம் வீசுவதால் குடிநீரை பயன்படுத்தவே முடியாத சூழல் நிலவுகிறது. கழிவுநீர் கலந்த குடிநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் நிலை ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விரைவில் தீர்வு காண வேண்டும்.