குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

Update: 2023-04-30 10:53 GMT

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

காங்கயம் நகரில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்தநிலையில் காங்கயம், ஏசி நகர் பகுதி வழியாக செல்லும் பி.ஏ.பி வாய்க்கால் அருகில் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. இந்த உடைந்த குழாயின் வழியே வெளியேறும் தண்ணீர் அப்பகுதியில் தேங்கி நின்று சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உடைந்த குழாயை சரி செய்து, குடிநீர் சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜூ,காங்கயம்.

9865180257

மேலும் செய்திகள்