வீணாகும் குடிநீர்

Update: 2023-04-30 10:22 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் அறந்தாங்கி முக்கம் அருகே உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதில் குடிநீர் வெளியேறி சாலை நடுவே செல்கிறது. இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குழாய் உடைப்பு காரணமாக அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குடிநீர் வீணாக வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்