குடிநீர் கிணற்றை மூட வேண்டும்

Update: 2023-04-26 18:21 GMT
ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாக்கம் கிராமத்தில் குடிநீர் கிணறு திறந்த நிலையில் உள்ளது. இதனால் தண்ணீரில் குப்பைகள் விழுந்து, அசுத்தமாகிறது. இதன் காரணமாக குடிநீரை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குடிநீர் கிணற்றை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்