குடிநீர் இன்றி மக்கள் அவதி

Update: 2022-07-21 17:10 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு போதிய குடிநீர் வருவது இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் சமைப்பதற்கும், குடிப்பதற்கும், தங்களின் அன்றாட தேவைக்கும் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் வரும் குடிநீரில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்