கைப்பம்பு சீரமைக்கப்படுமா?

Update: 2023-04-23 14:30 GMT

திருவாரூர் பகுதி தஞ்சை-நாகை சாலையில் வன்மீகபுரத்தில் பொதுமக்கள் வசதிக்காக கைப்பம்பு ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த கைப்பம்பு முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ளவர்கள் கைப்பம்பில் தண்ணீர் பிடிக்க முடியாத நிலை உள்ளது. மேலும், கைப்பம்பை சுற்றி மண் மற்றும் செடி,கொடிகள் சூழ்ந்து உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள கைப்பம்பை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனர்.



மேலும் செய்திகள்