புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டப்படுமா?

Update: 2023-04-19 12:14 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் மருவத்தூர் கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இப்பகுதியில் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நீர்த்தேக்க தொட்டி சிதிலமடைந்ததன் காரணமாக இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. இடித்து அப்புறப்படுத்தப்பட்டு சுமார் 5 மாதங்கள் ஆகியும் இன்னும் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்று தவித்து வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்