குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-04-12 10:21 GMT
சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பொது குடிநீர் குழாயில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வரவில்லை. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். குடிநீர்காக பொதுமக்கள் அருகில் உள்ள பகுதிகளுக்கு காலி குடங்களுடன் அலைந்து திரிய வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்