கலங்கலாக வரும் குடிநீர்

Update: 2023-03-29 14:30 GMT
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வி.களத்தூர் கிராம ஊராட்சிக்குட்பட்ட மேட்டுச்சேரி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஏரி மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் குடிநீர் சுத்தமாக இல்லாமல் கலங்கலாக வருவதால் அப்பகுதி பொதுமக்கள் அதனை பயன்படுத்த முடியவில்லை. இதுகுறித்து புகார் கொடுத்தும், மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்