குடிநீர் பற்றாக்குறையால் அவதி

Update: 2023-03-29 14:29 GMT
புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணம், கல்யாணராமபுரம் பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இப்பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீரை காசு கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மற்ற இடங்களுக்கு தண்ணீரை பிடிக்க சென்றாலும் அங்கும் சரியாக கிடைப்பதில்லை. இதனால் பொதுமக்கள், முதியவர்கள் கடும் சிரம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்ி கொள்கிறோம்.

மேலும் செய்திகள்