குடிநீர் இன்றி மக்கள் அவதி

Update: 2023-03-26 11:47 GMT

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை நகர பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக இப்பகுதியில் காவிரி குடிநீர் இணைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த காவிரி நீர் 15 நாட்களுக்கு ஒருமுறை வினியோகம் செய்யப்படுகிறது. அதுவும் போதுமான அளவு கிடைப்பதில்லை. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்