குடிநீர் வினியோகம் செய்யப்படுமா?

Update: 2023-03-22 12:34 GMT
பெரம்பலூர் அருகே எசனை கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசி்த்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகத்தில் இருந்து கிணறு மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது எசனை-அம்மாபாளையம் செல்லும் சாலையில் பாலப்பணிகள் நடந்து வருவதால் கடந்த ஒரு மாதங்களாக இப்பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் இப்பகுதி பொதமக்கள் குடிநீரை காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக லாரி மூலமாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்