குளம் தூர்வாரப்படுமா?

Update: 2023-03-12 10:31 GMT

நாகை மாவட்டம் வெளிப்பாளையம் சிவன் கோவிலில் தாமரை குளம் உள்ளது. இக்குளத்தில் சிலர் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். குளத்தில் ஆகாயத்தாமரை செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. குப்பைகள், ஆகாயத்தாரை செடிகளால் நீர் மாசுபட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள், பொதுமக்கள் தாமரை குளத்தை பயன்படுத்த முடியாத நிலை உருவாகி உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாமரை குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


மேலும் செய்திகள்