கைப்பம்பு சீரமைக்கப்படுமா?

Update: 2023-03-12 10:30 GMT

திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலை திருநெய்பேர் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கைப்பம்பு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த கைப்பம்பு தற்போது முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. பம்பு உள்ள பகுதியை சுற்றி நீர் தேங்கி நிற்கிறது, சிமெண்டு தளம் பெயர்ந்து காணப்படுகிறது. செடி,கொடிகள் வளர்ந்து பொதுமக்கள் கைப்பம்பை பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள கைப்பம்மை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்