குளம் ஆக்கிரமிப்பில் சிக்கியதா?

Update: 2023-03-12 10:30 GMT

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ரெங்கநாதபுரம் ஊராட்சியில் உள்ள குளம் ஆக்கிரமிப்புகளின் பிடியில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக குளத்துக்கு செல்லும் வழித்தடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குளத்தில் உள்ள படித்துறைகளும் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள குளம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.



மேலும் செய்திகள்