திருச்செந்தூர் அருகே சோனகன்விளை மெயின் ரோட்டில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து கடந்த சில நாட்களாக தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதனால் சாலையில் குளம் போன்று தண்ணீர் தேங்குவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் சாலையும் சேதமடைகிறது. எனவே குழாய் உடைப்பை சரி செய்வதுடன் சேதமடைந்த சாலையையும் சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.