குளத்தை சீரமைக்க கோரிக்கை

Update: 2023-03-08 13:20 GMT
புதுக்கோட்டை மாவட்டம்,வாராப்பூர் ஊராட்சி நெம்மேலிபட்டியில் ஒடம்புரா குளம் உள்ளது. இந்த குளத்தை நம்பி அப்பகுதியில் 100 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்று வந்தன. தற்போது குளத்தில் ஆங்கே செடி, கொடிகள் முளைத்து முட்புதர்போல் காட்சியளிக்கிறது. மேலும் சிலர் குளத்தை ஆக்கிமிப்பு செய்து வைத்துள்ளனர். இதனால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்