வீணாகும் குடிநீர்

Update: 2023-03-01 16:41 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சாமனூர் கூட் ரோட்டில் பாப்பாரப்பட்டி, தர்மபுரிக்கு செல்லும் குடிநீர் குழாய் உடைந்து நீண்ட நாட்களாக குடிநீர் சாலையில் வீணாக செல்கிறது. அப்பகுதியில் உள்ள மக்கள் குடிநீருக்காக சிரமப்பட்டு வரும் நிலையில் சுமார் 6 மாத காலத்திற்கு மேலாக குடிநீர் சாலையில் வீணாக செல்கிறது. இது சம்பந்தமாக பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

-துரை, மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்