சுத்தம் செய்யப்படாத கிணறு

Update: 2023-03-01 12:04 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் கிராமத்தில் ஏரிக்கரை அங்கன்வாடி மையம் அருகே ஊராட்சிக்கு சொந்தமான குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணற்றில் இருந்து தான் பொதுமக்களுக்கு தெரு குழாய்கள், வீட்டு குழாய் மூலமாக குடிநீா் வினியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது அந்த கிணற்றின் உட்புறத்தில் தண்ணீரில் மேல் பாசி படர்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த குடிநீரை குடிக்கும் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குடிநீர் கிணற்றில் படர்ந்துள்ள பாசியை அகற்றி தூய்மையாக வைத்திருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்