குடிநீர் இன்றி மக்கள் அவதி

Update: 2023-02-26 11:46 GMT

திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றியம், சித்தானந்த கிராமம் கலத்து வீடு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக இப்பகுதிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் சிறிய நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நீர்த்தேக்க தொட்டிகளில் இருந்து போதிய அளவு தண்ணீர் வருவது இல்லை. இதனால் இப்பகுதியில் உள்ள மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்